Friday, March 4, 2011

இதுவும் ஒரு வலி

வளையம் பொருந்தாமல்
வலியோடு ரத்தப் போக்கு..

மாத்திரைகள் எடுத்தாலோ
பக்கவிளைவின் பாதிப்பு..

உறைபோட்டுக் கொள்வதற்கோ
உடன்பாடே வருவதில்லை...

கர்ப்பத்தின் பயத்தோடு
ரசிக்கவியலாமல்
கடந்து போகும் காம இரவுகள்

ஐந்து பிரசவம்
ஆறேழு சிதைவு என்று
சோர்வாய் நிற்கும் பெண்ணின்
சோகத்தைப் புலப்படுத்தும்....




நன்றி; சௌந்தர சுகன் 



6 comments:

  1. கருப்பை சுமக்கும் பெண்ணினத்துக்கு மட்டுமேயான இடர்களில் இதுவுமொன்று!

    ReplyDelete
  2. அருமையான கருத்து. பெண்களின் நிலைமை வருந்தத்தக்கதுதான். ஆனாலும் தற்கால கணவன்மார்கள் பலரும் இந்த வலியை உணர்கின்றனர். அவர்களையும் கொஞ்சம் அடையாளம் கண்டுகொள்ளலாமே?

    ReplyDelete
  3. கட்டில்கள் ஒவ்வொரு மனிதருக்கும் தனித்தனியான இரவுகளை காட்டுவன.

    ReplyDelete
  4. பின்னியாச்சு ப்ரியா .
    நிறைய எழுதனும்

    ReplyDelete
  5. வலியை வலுவாய் எளிமையாய் பதிவில் கவிதை படுத்துதல் உங்களக்கு இயல்பாய் வருகிறது. வாழ்த்துக்கள்

    ReplyDelete