Thursday, March 17, 2011

..அந்தக் கேள்வி ..

அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்
பெட்டிகள்
குவிந்து கிடக்கும் கோப்புகள்
இடைவிடாது ஒலிக்கும்
விசாரணைக்கான அழைப்புகள்

இந்த
ஓய்வில்லாத
அலுவலக பரபரப்புக்கிடையேயும்
காதுகளில் கேட்டுக்கொண்டிருக்கிறது
காலையில் கிளம்பும்போதே
மகன் கேட்ட
"எப்பம்மா வருவீங்க" என்ற
ஒற்றைக் கேள்வி....


நன்றி; கல்கி..

 

1 comment:

  1. தாய் மனசு!
    அந்த கேள்வி நாள் முழுவதும் உள் மனசுக்குள் விரட்டுவதுதான் வாழ்வை சில நேரங்களில் அர்த்தமுள்ளதாகவும் கேள்விக்குறியாகவும் ஆக்கிவிடுகிறது.

    ReplyDelete