Saturday, July 23, 2011

மொழியின் தீ......

ஒளிந்து கொள்கிறேன்
இந்த காதல் விளையாட்டில்
உன்னிடம் அகப்பட்டு விடக் கூடாதென்று......
என்றாலும்
சின்ன உதடுகளைத் திறந்து
நீ
செல்ல மொழிகளை உதிர்க்கையில்
தீப்பற்றிக் கொள்கிறது
என் அந்தப்புரம்..........
 
 
நன்றி; கல்கி வார இதழ்...
 

8 comments:

  1. செல்ல மொழிகள் சொல்ல கேட்பது சுகானுபவம் . அவை தீயாய் மட்டுமல்ல ,உருகி உறைந்துபோகவும் செய்யும், துளிர்த்து தழைக்கவும் செய்யும். அழகான குட்டிக் கவிதை.

    ReplyDelete
  2. கல்கி பிரசுரத்திற்கு நல்வாழ்த்துகள்.
    தலைப்பே அசத்தலாய்.

    ReplyDelete
  3. மொழியின் தீ தகிக்கும் சுவை.

    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. புல்லாங் குழலோசையில்,கோபிக‌ளின் பிருந்தாவ‌னக் காட்சி விரிகிற‌து இந்த‌ வ‌ரிக‌ளில்.

    ReplyDelete
  5. உங்களை வலைச்சரத்தில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    http://blogintamil.blogspot.com/

    ReplyDelete
  6. மொழியின் தீ கவிதை மனதை கொள்ளைக்கொண்டு பற்றி எறிகிறது...அருமை.... வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. சின்னதாய் செதுக்கப்பட்ட எண்ண ஓவியம்.

    ReplyDelete