Tuesday, November 13, 2012

இதுவும் சந்தோஷம் தான்.....


பண்டிகைக்குஇன்னும்ஒருசிலதினங்களேஇருந்தது.

துணிமணிகள்எடுத்தாயிற்று!

பலகாரங்கள்….. 

அதுபற்றிபேசித்தான்காலையில்அலுவலகம்

கிளம்பும்போது

எரிச்சலாகிவிட்டாள்மாலா.

Friday, November 2, 2012

அவன் பெரியவன்.....

விடாமல் மழை கொட்டிக் கொண்டிருந்தது.. இரண்டு நாள் மழையில் சாலைகள் கிட்டத்தட்ட சேதமாகிவிட்டிருந்தது... வேலை முடிந்து திரும்பிக் கொண்டிருந்தேன். ஒரு கையில் குடையும், சேலையைத் தூக்கிப் பிடித்தக் கையில் சாப்பாட்டுக் கூடையும், தோள் பையுமாய் திணறித் திணறி வந்து வீட்டுக்குள் நுழைகையில் பிள்ளைகளுடன் அவரும் தொலைக்காட்சி முன்னால் உட்கார்ந்திருந்தார்கள்.....

எனனைக் கண்டதும் சின்னவன் வேகமாக ஓடி வந்தான். ‘அம்மா, எங்களுக்கு நாளைக்கும் விடுமுறைன்னு சொல்லிட்டாங்களே... ஹையா... ஜாலி...” , பெரியவன் ஏற்கனவே விடுமுறையில் தான் இருந்தான். கும்மாளமாக இருந்தது அவர்களுக்கு....

சூடாக  ஏதாவது குடிக்க வேண்டும்

Friday, October 12, 2012

கண்ணா போற்றி! கிருஷ்ணா போற்றி!

எதையும் பகிர்ந்து கொள்ள எனக்கிருந்த இனியன் அவன்.... இருக்கிறான் என்று பல முறை எனக்கு நிரூபித்தவன்.... எனக்குத் துணையாய் எப்போதும் இருப்பவன்....
அலைகடலில் துரும்பாய் நான் அல்லாடிய தருணங்களில் என்னை கை தூக்கி  அவன் கரை சேர்த்திருக்கிறான். அவனிடம் மட்டுமே அழுதிருக்கிறேன், அவனிடம் மட்டுமே ரகசியங்களைப் பகிர்ந்திருக்கிறேன், அவனை மட்டுமே நம்பியிருக்கிறேன்.

Monday, September 17, 2012

வேணும் வெள்ளை மாத்திரைகள்....

சில நாட்களுக்கு முன்னால் நண்பர் திரு இரா. எட்வின் அவர்கள் இந்தியாவின் மருத்துவர்கள் பற்றியும், மருந்துகள் விலைப் பற்றியும் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அரசு மருத்துவமனைகள் குறித்தும் ஒன்றிரண்டு வரிகள் அதில் வந்திருந்தன. பொதுவாகவே அரசு மருத்துவமனைகள் என்றால் கொஞ்சம் அலட்சியமும், அங்கே தவறுகள் தான் நடக்கும் என்றும் தான் மக்களாகிய நாம்  சிந்திக்கிறோம். மேலே குறிப்பிட்ட கட்டுரையில் கூட, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தனியார் மயமாக்கப் படுவதை எதிர்த்துத் தான் பேசியிருந்தார் எட்வின்.  அவர் வசிக்கும் பெர்ம்பலூரில் உள்ள  அரசு மருத்துவமனைப் பற்றியோ, பணி புரியும் இடத்திலிருக்கும் அரசு மருத்துவமனைப் பற்றியோ சொல்ல ஒன்றுமில்லை அவருக்கு.  சரி அவர் அரசியல் அவருக்கு.

Monday, August 20, 2012

ஆனந்தம்......

உங்கள் காலத்தில்
அலைபேசிகள் இல்லையா....

திரைப்படங்களை
வானொலியில் கேட்டீர்களா...

பள்ளி வாகனம் இல்லாமல்
எப்படி பள்ளிக்குப் போனீர்கள்..

கணிணிகள் இல்லாத வாழ்வு
கசப்பாயில்லையா

விதவிதமாய்
கேள்விக்கணைகள் வீசும்
என்
குட்டிக்கவிதையை
அணைத்தபடி சொன்னேன்..

நாங்கள்
அப்போது தான் இருந்தோம்
ஆனந்தமாய்....

இயலாமை.....

கதவு சன்னலை
இறுக அடைத்து
திரைச்சீலைகளை
இழுத்துவிட்ட பின்பும்
உடை மாற்ற முடியவில்லை.....

சுவற்றில் இருந்து கொண்டு
சிரித்தபடி பார்க்கின்றனர்
சிவன் முருகன்
பெருமாள் பிள்ளையார்
இன்ன பிற ஆண்கள்.....

Thursday, April 19, 2012

நினைவுச் சாரல் குறித்து ஒரு பதிவுச் சாரல்




உலகின் ஆதியாக இருக்கிறாள் அம்மா. எந்த இனமானாலும் அம்மாவிலிருந்தே தொடங்குகிறது. கடல் நீரை உள்வாங்கி கருணை மழையாய் பொழியும் மேகம் போன்றவளா, எல்லா உயிரினமும் வாழ தன் மடி விரித்து மகிழ்ந்திருக்கும் பூமியைப் போன்றவளா? அம்மாவை விளக்கிச் சொல்ல வார்த்தைகள் ஏது? அம்மாவால் வளரும் எல்லா பிள்ளைகளும் வளர்ந்த பின் அம்மாவை நினைக்கிறார்கள். சிலர் மட்டுமே தமது செயல்களால் அம்மாவை உலகின் முன் நிலை நிறுத்துகிறார்கள்..மிகச் சிலரே ‘இப்படியொரு அம்மா நமக்கு வாய்க்கவில்லையேஎன்று ஒவ்வொருவரும் ஏங்கும் விதமாக மிகச் சிறப்பாக அம்மாவின் நினைவைப் பாடிப் பரவுகிறார்கள்.. சுகன் அம்மாவால் வளர்ந்தவர்., அம்மாவால் வாழ்கிறவர், அம்மாவால் நிலைத்திருக்கப் போகிறவர்.... ஒவ்வொரு வருடமும் அம்மாவின் நினைவு நாளை சடங்கு, சம்பிரதாயங்கள் என்னும் பாசாங்குகளில் மூழ்கிவிடாமல் இயல்பான இனிமையான இலக்கிய நிகழ்வாக்க் கொண்டாடும் சுகன் ஒரு முன்னுதாரணம்...
இந்த வருடம் 9.3.2012 அன்று மாலை எல்லா சுகன் நிகழ்வுகளையும் போலவே மிகச் சரியாக  6.30 மணிக்கு அம்மாவின் நினைவுச் சாரல் வீசத் தொடங்கிற்று....