மருத்துவர் மணிமாறன் சார் பிரிவுபச்சார விழாவில் வாசித்த கவிதை
அடைமழைக் காலத்தில்
இடை வந்த சூரியன் போல
இந்த
அரசு மருத்துவமனைக்கு
அபயம் அளிக்க வந்தவர் நீங்கள்…
உங்கள் அன்பெனும் மந்திரத்தால்
அழகாய் பூத்தது இந்த
மருத்துவமனை
ஒரு சோலையைப் போல…
அதிகாரத்தின் எல்லைகளை
புன்சிரிப்பென்னும்
வண்ணப்பொடியால்
வரையத் தெரிந்த உங்கள் முன்
எப்போதும் மறைந்து போகும்
அகங்கார வெள்ளைப்புள்ளிகள்….
மனிதர்களிடம் மனிதத்தை மட்டுமே
தேட யத்தனிக்கும்
மகத்துவமான மனம் உங்களுக்கு
அதனால் தான்
மாதங்களில் தான் பழகினோம் என்றாலும்
மனது வலிக்கிறது உங்கள் பிரிவில்…
வலியோடு வருகிற
ஒவ்வொருவரையும்
கருணையோடு அணுகத் தெரிந்த
உங்களுக்கு
கடுமை ஒருபோதும்
கைவரப் பெற்றதில்லை…
குறைகளைக் கூறியபடி
தொடர்ந்து வந்த குழுக்களைக்கூட
இயல்பான உண்மைகளை
இன்முகத்துடன் கூறி
இணக்கத்துக்குரியவர்களாய்
மாற்றியது
உங்கள அன்பதிகாரத்திற்கு
அழியா சாட்சி……
மருத்துவரய் மட்டுமல்ல
எங்களுக்கு இனிய
நண்பராகவும் மனதில்
நிலைத்தவர் நீங்கள்…..
செல்லும் வழியெல்லாம்
அன்பை விதைத்துச் செல்லும் உங்கள் இன்முகம்….
எங்கள் பிரியத்துக்குரிய மருத்துவரே…..
வாழ்வின் பெருவீதியில்
நீங்கள் விரும்பியதெல்லாம்
கிடைக்கட்டும்….
வளமும் மகிழ்வும் நிறைவுமாய்
வசப்படட்டும் வாழ்வு…..
மனமார்ந்து நெகிழ்வாய் வாழ்த்துகிறேன்…
வாழ்த்துக்கள் சார்…
ஹேமலதா,
மருந்தாளுநர்,
அரசு மருத்துவமனை,
பூதலூர்….
Great article with excellent idea! I appreciate your post. Thank you so much and let keep on sharing your stuffs.
ReplyDeleteTamil News
Latest Tamil News
Tamil Newspaper
Kollywood News
Tamil News Live
Online Tamil News
Tamil Cinema News
Tamil Film News
Tamil Movie News
Latest Tamil Movie News