Thursday, February 13, 2014

ஈன்ற பொழுதில்


விஜய் ரோஷன்





பாட்டும் பரதமும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது சிறு வயது முதல் என் தீராத ஆசை....
பள்ளிப் பருவத்திலே நிறைய நடனங்கள் ஆடியிருக்கிறேன், என் நடனம் இன்றி பள்ளியில் ஒரு விழாவும் நடக்காது என்ற அளவுக்கு.! ஆனாலும், பரதம் மட்டும் ஆடியதே இல்லை. பரதம் ஆடுவது கொஞ்சம் பொருட்செலவுக்குரிய  செயல் என்பதால், அதற்கு வழியில்லாத என்னை  ஆசிரியர்கள் தேர்ந்தெடுத்ததே இல்லை. அது இன்னமும் ஒரு தீராத ஏக்கம் தான் மனதில்...

எப்படியும் அந்த பரதத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற வெறி மனதில் இருந்ததன் விளைவு,

Sunday, February 9, 2014

கவிதா





  “வா கவிதா, பையனை அழச்சிட்டு வரலயா?”.. என்ற படி கதவைத்திறந்தாள்
 மேகலா.  
“இல்லண்ணி, அவர் வீட்ல இருக்கார், அதான் விட்டுட்டு வந்தேன்” என்ற
கவிதாவின் குரல் சுருதி இல்லாமல் இருந்தது. கையில் இருந்த  சின்ன 
கூடையை கதவருகில்  வைத்தாள்.

“என்னங்க, கவிதா வந்து இருக்கா பாருங்க” என்றபடி ரூமைப்பார்த்து குரல்
கொடுத்த மேகலா, “ஏன் கவிதா, வாட்டமாய் இருக்க? சரவணன் வேலைக்குப்
போறாரா? ஏதும் பிரச்சனையா?” என்று கேட்டாள்.

Friday, February 7, 2014

கள்ளியிலும் பூக்கள்



சப்பாத்திக் கள்ளி மலர் 

















எண்ண ஊற்றுகளில்
பீறிட்டு வழியும் காதலால்
நிரம்பித் ததும்புகிறது
உள்ளக் கோப்பை
ஆற்றுப் படுகைகளில்
ரசிப்பாரின்றி குலுங்கும்
முற்றாத தேக்கின் பூக்களென……!

புறக்கணிப்பின் வலியில்
சப்பாத்திக் கள்ளியின்
முட்களென உருமாறுகிறது  விழிகள்…..

பயந்து தடுமாறி
ததும்பி வழிந்தோடும் கோப்பையை
வெற்றிடமாக்கும் முயற்சியில்
காதலை வார்த்தைகளாய்க்
குழைத்து, குழைத்து
பிரபஞ்ச வெளியெங்கும் வீசுகிறேன்…….

வீசிய இடமெல்லாம்
காதலின் வித்துக்கள் முளைத்து
மணக்கத் தொடங்குகிறது  பிரபஞ்சம்…

பூத்திருக்கிறது
கள்ளியிலும் பூக்கள்.......




நன்றி: கல்கி வார இதழ்