Tuesday, June 1, 2010

கல்லாய் நீ

கழுத்தில் தாலியும் ,
இடுப்பில் அரைமூடியும்
மட்டுமே அணிந்தபடி
நளினமாய் தான் நிறுத்தப்பட்டிருக்கிறாய் நீ....

போற்றி போற்றி என்று
மெய் மறந்து பாடியபடி
கரம் கூப்பி அமர்ந்திருக்கின்றனர்
எதிரே எத்தனையோ பெண்கள்.....

எண்ணெய் தடவிவிட்டு
மஞ்சள் முழுக்காட்டி
எத்தனையோ திரவங்களால்
நீ மூச்சு திணற,
குளிரால் விறைக்க
உன்னை குளிப்பாட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.....

எனக்கென்னவோ
உடலே கூசுகிறது.....
என்ன தான் நீ கல்லாய் நின்றாலும்
அர்ச்சகர்கள் ஆண்கள்ஆயிற்றே ......

கிருஷ்ணப்ரியா

(நன்றி: சௌந்தர சுகன்)