Monday, June 20, 2016

கையறுநிலை

காலில் செருப்பில்லாத
குழந்தையைக் காட்டி
சமாதானம் எதுவும் செய்துவிட முடிவதில்லை,
தன் ஷூக்கள் புதிதில்லை
என்று புலம்ப மகனை...
செருப்பு வாங்கித் தராதது
அவன் பெற்றோரின் குற்றமேயன்றி
என் குற்றமல்ல என்று வாதிடும் அவனிடம் சொல்ல இயலவில்லை, பெற்றோரே இல்லாத பிள்ளைகள் பற்றிய நிஜங்களை....

Sunday, June 19, 2016

முக்கூடலில் ஒரு இலக்கிய குளியல்...

வெகு நாளாயிற்று வலைப் பக்கம் வந்தே.... முகநூல் போவது போல் வலைதளம் வராமல் இருப்பது ஒரு குறையாகவே இருந்தது. இதோ, மீண்டும் வந்தாச்சு...