Thursday, March 17, 2011

எழுதும் நேரம்....

எழுதவே நேரமில்லை
என்று
எப்போதும் புலம்புவேன்
உன்னோடான 
பேச்சுக்களில் 
என் நேரமனைத்தையும் 
செலவு செய்யும் போது.......

சின்னதாக ஊடல் வந்து 
உன்னோடு 
பேசாமல் கழிகின்ற 
நிறைய நேரங்களிலும்
எழுதாமல் தான் இருக்கிறேன்
உன்னைப் பற்றியே 
நினைத்தபடி..... 

முகமூடிகள்.......

எப்போதும்
என் கைப்பையில் இருக்கிறது
ஏராளமான முகமூடிகள்......

யதார்த்தம் மறைப்பதே
இயல்பாகிப் போன
இன்றைய வாழ்வில்
தவிர்க்கவே முடியவில்லை

இறுதி வரை...

நினைவு தப்பிப் போய்
படுக்கையில் கிடக்கும் பாட்டி
புலம்பிக் கொண்டிருக்கிறாள்.....
பக்கத்து வீட்டு
சின்னசாமி  தாத்தாவோடு
தனக்குத்   தொடர்பில்லை என்று .......




கறைகள்.....

இற்று விட்டதோ
என எண்ணும்படிக்கு
துவண்டு விழும் கால்களோடு

ஒரு நாளைக்கு பல முறையாய்
கழிப்பறைக்குள்  நுழைந்து
ஈரப் பிசுபிசுப்போடிருக்கும் அதை
காகிதத்தில் சுற்றிப் போட்டு
புதிதாக ஒன்றை
சுலபமாக வைத்துக் கொள்ளும்
எல்லா நேரங்களிலும்
தவறாமல் நினைக்கிறேன்

துவைத்து அலசி
யார் கண்ணிலும் படாமல்
ரகசியமாய் காயவைத்து
அழுத்தமாய் படிந்து போன
கறைகளோடு 
அதையே மீண்டும்
கஷ்டப்பட்டு உபயோகிக்கும்
எத்தனையோ பெண்களை...


நன்றி:சௌந்தர சுகன்

..அந்தக் கேள்வி ..

அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்
பெட்டிகள்
குவிந்து கிடக்கும் கோப்புகள்
இடைவிடாது ஒலிக்கும்
விசாரணைக்கான அழைப்புகள்

இந்த
ஓய்வில்லாத
அலுவலக பரபரப்புக்கிடையேயும்
காதுகளில் கேட்டுக்கொண்டிருக்கிறது
காலையில் கிளம்பும்போதே
மகன் கேட்ட
"எப்பம்மா வருவீங்க" என்ற
ஒற்றைக் கேள்வி....


நன்றி; கல்கி..

 

ஞாபகத் தேனீ

குளிர்கால இரவுகளில்
போர்வைக்குள் பதுங்கும் போது
உன் இதமான அன்பு
நினைவுக்கு வருகிறது...!

சூடான தேநீரும்
சில்லிடும் மழையுமாய்
மாலை நேரங்கள்
உன் மந்தகாசப் புன்னகையை
நினைவூட்டுகிறது...!

வேனல் காலத்து
வியர்வை கசகசப்பில்

நானும் என்னைப்போன்ற என் வீட்டு மேரியும்.

அன்று ஞயிற்றுக்கிழமை.  பொதுவாக எல்லோரும்  அந்த நாட்களில் எல்லா வேலைகளையும் ஆற அமர செய்வார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் நான் அலுவலகம் கிளம்புவதைவிட சுறுசுறுப்பாய் காலையிலேயே சமையலைத்  தொடங்கிவிடுவேன். ஆகா, நீ சுறுசுறுப்புத் திலகம்தான் என்று யாரும் எனக்கு அவசரப்பட்டு பட்டம் தந்துவிட வேண்டாம். என் சுறுசுறுப்பான சமையலுக்குக் காரணம், தொடர்ந்து எனக்கு கிடைக்கப்போகிற நிம்மதியான ஓய்வுதான்.  ஞாயிற்றுக் கிழமைகளில் மீன்குழம்பு வைத்து, உணவுக்கட்டுப்பாடு ஏதும் இல்லாமல் நன்றாக சாப்பிட்டு, அப்படியே போய் படுத்துக்கொண்டு அன்று வந்த தினசரி அல்லது ஏதாவது  புத்தகத்தை விரித்து லேசாக படிப்பதற்குள் அருமையாய் தூக்கம் வரும். கிட்டத்தட்ட 2  முதல் 3  மணி நேரம்  கூட தூங்குவேன். அப்படி மீன்குழம்பும் தூக்கமும் இல்லாத ஞாயிறுகளை என்னால் ரசிக்கவே முடிவதில்லை. மீனுக்கு பதிலாக வேறெதையும் சமைக்கக்கூட பிடிப்பதில்லை எனக்கு.

Thursday, March 10, 2011

நழுவி விழும் வார்த்தைகள்

எனக்கான கடமைகள்
துயிலெழுப்ப
என் பொழுது புலர்கிறது.....

மனைவியாய், தாயாய்
பொறுப்புகள் வரிசைக் கட்டி நிற்க

ஒரு திரைப்படம்....




சினிமா பார்ப்பதில் பெரிய ஆர்வம் ஏதுமில்லை எனக்கு.கொஞ்சம் பழைய படங்களைப் பார்க்க வேண்டுமென்று சில சமயம் தோன்றுவதுண்டு. நினைவு வரும்போது அந்தப் படங்களின் பெயரை எழுதி வைத்தால் சி.டி. வாங்கிப் பார்க்கலாம் தான். எதையுமே உடனே எழுதி தான் நமக்கு பழக்கமில்லையா, அது அப்படியே மறந்து போய்விடும்..

Friday, March 4, 2011

இதுவும் ஒரு வலி

வளையம் பொருந்தாமல்
வலியோடு ரத்தப் போக்கு..

மாத்திரைகள் எடுத்தாலோ
பக்கவிளைவின் பாதிப்பு..

உறைபோட்டுக் கொள்வதற்கோ
உடன்பாடே வருவதில்லை...

கர்ப்பத்தின் பயத்தோடு
ரசிக்கவியலாமல்
கடந்து போகும் காம இரவுகள்

ஐந்து பிரசவம்
ஆறேழு சிதைவு என்று
சோர்வாய் நிற்கும் பெண்ணின்
சோகத்தைப் புலப்படுத்தும்....




நன்றி; சௌந்தர சுகன் 



சந்தோஷமாய் ஒரு அறிவிப்பு...

2010 ஆம் ஆண்டில் வெளிவந்த 12 சௌந்தரசுகன் இதழ்களில் அச்சாகியிருந்த 98 கவிதைகளில் நான்கு கவிதைகளை தேர்ந்தெடுத்து கவிதை ஒன்றுக்கு ரூ.250 பரிசு வழங்கப்படுகிறது, "அம்மா ஞா.சுசீலா மூன்றாமாண்டு நினைவு விழா"வில்.! . . . .

பரிசுக்குரிய கவிஞர்கள். . .. . .


கிருஷ்ணப்ரியா,

சக்தி அருளானந்தம்,

வடுவூர் சிவமுரளி,

நாவல் குமாரகேசன்.........


விழா நடைபெறும் தேதி மார்ச் 9 . இடம்; அம்மா வீடு, சி 46  இரண்டாம்

 தெரு, முனிசிபல் காலனி , தஞ்சாவூர்.




அனைவரும் வருக..\

உங்கள் வாழ்த்துப் பூக்களைத் தருக.....