Monday, July 15, 2013

இன்று இரவுடன் தந்தி சேவை நிறுத்தப்படுகிறதாம். 14/07/2013

இன்று இரவுடன் தந்தி சேவை நிறுத்தப்படுகிறதாம்....

 காலையில் தொலைக்காட்சியில் கேட்ட ( பார்த்த?)  செய்தி கொஞ்சம் வருத்தப்பட வைத்தது. பழையன கழிதலும், புதியன புகுதலும் எப்போதும் உள்ளது தான் என்றாலும், சில பழையன கழிகையில் வலிக்கத் தான் செய்கிறது....

இன்றைய தலைமுறைக்கு தந்தி என்பது அவ்வளவாக பரிச்சயப் படாத ஒரு விஷயம். கடிதமும்,தந்தியும் மட்டுமே தொடர்பு சாதனங்களாக இருந்த காலத்தில் பிறந்து வளர்ந்த என்னைப் போன்றவர்களுக்கு நிச்சயம் தந்தி சேவை நிறுத்தம் ஒரு சின்ன வலியையாவது தரத் தான் செய்யும்..

சினிமாவில் , ’சார்,  தந்தி’என்ற குரலும், சீருடை அணிந்த ஒருவர் ஒரு காகிதத்தில் கையொப்பம் வாங்கிக் கொண்டு ஒரு மடித்த காகிதத்தை தந்து போவதும் காட்டுவார்கள். காகிதத்தை வாங்கியவர் அதனை பிரித்துப் படிப்பார்.ஆனால் நிஜத்தில் தந்தி பிரித்த ஒரு காகிதமாகவே வரும். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வாசகங்களைக்கொண்டு வரும் அந்த காகிதத்தை சீருடை அணிந்த பணியாளரும் வழங்கியதில்லை. தந்தி மேன் என்று ஒருவர் இருப்பார். அவரைப் பார்க்கும் போதே பயமாக இருக்கும்.

Saturday, April 27, 2013

வெற்றிக்குப் பெண்ணென்று பேர்


முற்றுப்  புள்ளிகளிலிருந்து  என்ற தலைப்பில் மார்ச் மாதம் வெளிவந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் என் கட்டுரை....


வெற்றிக்குப் பெண்ணென்று பேர்


வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்தது. போராட்டங்களை எதிர்கொள்ளுவதும், நமது பங்களிப்பைச் சிறப்பாய்த் தந்து போராடி வெற்றியை எட்டுவதும் தான் வாழ்வின் தினசரியாக இருக்கிறது. ஒவ்வொரு வினாடியுமே ஏதோ ஒரு விஷயத்துக்கான போராட்டம் தான். மரணம் சம்பவித்து விடாமல் இருக்க மறக்காமல் மூச்சு விட்டுக் கொண்டேயிருப்பது கூட போராட்டம் தானே..!
ஆண்களும் பெண்களும் நிறைந்த இந்த உலகில், சந்தர்ப்பங்களும், வாய்ப்புகளும், சமாதானங்களும் எப்போதும் ஆண்களுக்கே வாரி வழங்கப்படுகிறது. பெண்கள் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறவர்களாக, கிடைக்கிற வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்கின்ற சந்தர்பங்கள் மறுக்கப்படுகிறவர்களாக, இழப்புகளுக்கு தங்களுக்குத் தாங்களே சமாதானம் கூறிக் கொள்கிறவர்களாக இருக்கும் நிலை தான் எப்போதும் இருந்து வந்திருக்கிறது.
ஆனால் இப்படிப் பட்ட உலகிலும் பெண்கள் தன்னம்பிக்கையுடன், தைரியத்துடன், வாழ்த்தான் செய்கிறார்கள். நான் என்னைப் பற்றிச் சொல்லத்தான் இந்த கட்டுரையைத் தொட்ங்கினேன். யோசித்துப் பார்க்கையில் என்னைப் பற்றி பெருமையாய்ச் சொல்லி பக்கங்களை நிரப்பிச் செல்ல ஒன்றுமேயில்லை என்று தோன்றுகிறது. நாம் வாழ்க்கையில் சந்திக்கின்ற சிலர் நம்மை ஒன்றுமில்லாமல் அடித்து விடுகின்றனர். அப்படி ஒரு பெண்ணைப் பற்றி, அவளது நெஞ்சுறுதி பற்றி சொல்வதில்

Friday, January 11, 2013

நாயகன்.......

வாழ்க்கை பல விஷயங்களை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது.... ஒவ்வொரு வினாடியுமே நமக்கு ஒரு ஆசானாகத் தான் இருக்கிறது. நாம் தான் பல தருணங்களைத் தவற விடுகிறோம். 
தினமும் செல்லும் வழியில் நான் பல மனிதர்களைப் பார்க்கிறேன். பல குழந்தைகளைப் பார்க்கிறேன். ஏதோ ஒரு விதத்தில் அவர்கள் ஒவ்வொருவரும் எனக்கு ஒவ்வொரு விஷயத்தைச் சொல்லிச் செல்கிறார்கள்...எதிர்காலம் குறித்த கவலை இன்றி, ஒவ்வொரு நிமிடத்தையும் சந்தோஷமாய் கழிக்கின்ற குழந்தைகளைக் கடந்து செல்கையில் நான் புதிதாய் பிறப்பதாய் உணர்கிறேன்.