Friday, March 7, 2014

மகளிர் தின வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள் பெண்ணே....
உனக்கு
மகளிர் தின வாழ்த்துக்கள்
மகிழம் பூவாய் உன்
மனம் மணக்கட்டும்..

ஆயிரம் தொல்லைகள்
உன்னைச் சுற்றி வந்தாலும்
மத்தாப்பூவாய்
நீ மலர்ந்து சிரி.....
பிரச்சனைகள் உனைக் கண்டு
பிடரியில்  கால் பட பயந்து ஓடட்டும்....

யாருக்கு இல்லை கவலைகள்
சிரி
உன்னைச் சுற்றி
சந்தோஷ சாம்ராஜ்யம் உருவாக்கு.....

வாழ்வது ஒரு முறை தானே 
பெண்ணே
அகிலம் உன்னால் வாழட்டும்....

அன்பெனும் மந்திரம்
ஓதப் பழகு
அன்பெனும் அன்னம்
வாரி வழங்கு
அன்பெனும் உடைகள்
உடுக்கக் கொடு
அன்பால் உலகை
அணைத்துக் காட்டு....
அன்பே
நீ தானே பெண்ணே......

பொறாமை விடு
அகம்பாவம் அழி
அறிவைப் பெருக்கு
ஆற்றலை உயர்த்து....
அன்பை அழிப்போரை
அடித்தும் திருத்து....

கண்ணீர் விட்டு காலம்
களையாதே
சோம்பியிருந்து சோர்ந்து போகாதே
சட்டத்தின் துணையோடு
எங்கும்
சமாதானம் நிகழ்த்து

உன் பூங்கரங்களில் தான்
புவியே இருக்கிறது பெண்ணே,,,,,

பெண்கள் தின வாழ்த்துக்கள்
பெண்ணே உனக்கு ....!


நன்றி: பெண்ணாய்ப் பெற்று
        
              பெருமையுடன் வளர்த்த
       
              பெற்றோர் சங்கரன் / பார்வதிக்கு