Friday, October 12, 2012

கண்ணா போற்றி! கிருஷ்ணா போற்றி!

எதையும் பகிர்ந்து கொள்ள எனக்கிருந்த இனியன் அவன்.... இருக்கிறான் என்று பல முறை எனக்கு நிரூபித்தவன்.... எனக்குத் துணையாய் எப்போதும் இருப்பவன்....
அலைகடலில் துரும்பாய் நான் அல்லாடிய தருணங்களில் என்னை கை தூக்கி  அவன் கரை சேர்த்திருக்கிறான். அவனிடம் மட்டுமே அழுதிருக்கிறேன், அவனிடம் மட்டுமே ரகசியங்களைப் பகிர்ந்திருக்கிறேன், அவனை மட்டுமே நம்பியிருக்கிறேன்.