Showing posts with label நாயகன். Show all posts
Showing posts with label நாயகன். Show all posts

Friday, January 11, 2013

நாயகன்.......

வாழ்க்கை பல விஷயங்களை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது.... ஒவ்வொரு வினாடியுமே நமக்கு ஒரு ஆசானாகத் தான் இருக்கிறது. நாம் தான் பல தருணங்களைத் தவற விடுகிறோம். 
தினமும் செல்லும் வழியில் நான் பல மனிதர்களைப் பார்க்கிறேன். பல குழந்தைகளைப் பார்க்கிறேன். ஏதோ ஒரு விதத்தில் அவர்கள் ஒவ்வொருவரும் எனக்கு ஒவ்வொரு விஷயத்தைச் சொல்லிச் செல்கிறார்கள்...எதிர்காலம் குறித்த கவலை இன்றி, ஒவ்வொரு நிமிடத்தையும் சந்தோஷமாய் கழிக்கின்ற குழந்தைகளைக் கடந்து செல்கையில் நான் புதிதாய் பிறப்பதாய் உணர்கிறேன்.