Showing posts with label நெருப்பு....... Show all posts
Showing posts with label நெருப்பு....... Show all posts

Sunday, June 19, 2011

அம்மா

அலுவலகத்திற்கும் வீட்டிற்குமாய்

ஓய்வில்லாது உழைத்து

அலுத்துக் களைத்துப் போகும்

எண்ணற்ற தருணங்களில்

எல்லோரிடமும்

சிடுசிடுக்கும் அம்மா

சீறுவதேயில்லை 

பத்துப்பாத்திரம் தேய்க்கும்

பத்மாவிடம் மட்டும்....


களித்துச் சிரித்திருக்கும்

எங்களுக்கான நேரங்களில்

காரணம் கேட்டால்

வீட்டிலும் வெளியிலும்

அவளும் தான் தேய்கிறாள்

என்னைப் போலவே.....

பதில் சொல்லும்

அம்மாவின் கண்களில்

எப்போதும் தெரிகிறது நெருப்பு......



நன்றி: கவண் இதழ்..