Tuesday, February 15, 2011

வற்றாத அன்பு.

எப்போதுமே
என் வாழ்வின் அறிமுக நேரங்கள்
அதிகமாகி வருகிறது.....
ஒவ்வொரு புள்ளியும்
ஒரு
ஆரம்பமாய்....

முற்றுப் புள்ளி என்பது

துக்கங்களுக்கு மட்டுமே....

அறிமுகமாகும்
அத்தனை மனிதர்களிடமும்
ஏதோவொரு
புதிய விஷயம்
கற்றுக் கொள்கிறேன்..!
கற்றலும்-அதற்குத் தக
நிற்றலும்
இனிமையானது தான்...

என்
நட்புச்செடியின்
கிளைகள்
விரிந்து விரிந்து
மேலும் அழகாய்...
ஒவ்வொரு முறையும்
புதுப்புது பூக்கள்..
எல்லா பூவிலும்
ஏதோவொரு புதிய நறுமணம்....

வாழ்வின் வசந்தங்கள்
வற்றி விடுமா எனா..?
வற்றாத ஜீவநதியாய்
அன்பு என்ற
வேரோடிக் கொண்டிருந்தால்....!

2 comments:

  1. உண்மைதான்... உனக்கு ஒரு நண்பனாக இருந்திருக்கலாமோ என்றுகூட என் மனம் சிலசமயம் ஏங்குவதுண்டு. இருப்பினும்......
    வாழ்க நட்பு!!!

    ReplyDelete
  2. @ கண்ணன்

    ஒரு நண்பனாகவும் எனக்கு கிடைத்திருக்கும் அருமை தம்பியல்லவா நீ? எத்தனை பேருக்கு வாய்க்கும் இப்படி ஒரு அதிர்ஷ்டம்..!

    ReplyDelete