Monday, August 20, 2012

இயலாமை.....

கதவு சன்னலை
இறுக அடைத்து
திரைச்சீலைகளை
இழுத்துவிட்ட பின்பும்
உடை மாற்ற முடியவில்லை.....

சுவற்றில் இருந்து கொண்டு
சிரித்தபடி பார்க்கின்றனர்
சிவன் முருகன்
பெருமாள் பிள்ளையார்
இன்ன பிற ஆண்கள்.....

1 comment:

  1. நல்ல கவிதை. ஆனால், ஆண்டவனுக்கும் மனிதனுக்கும் வித்தியாசம் இருக்கிறதே. ஆண்டவன் இல்லாத இடம் ஏது. அவன் நம்மைக்காணாத தருணம்தான் ஏது?
    கண்டிப்பாக நல்ல கவிதை, சிறந்த கற்பணை வளம்.

    ReplyDelete