Monday, June 20, 2016

கையறுநிலை

காலில் செருப்பில்லாத
குழந்தையைக் காட்டி
சமாதானம் எதுவும் செய்துவிட முடிவதில்லை,
தன் ஷூக்கள் புதிதில்லை
என்று புலம்ப மகனை...
செருப்பு வாங்கித் தராதது
அவன் பெற்றோரின் குற்றமேயன்றி
என் குற்றமல்ல என்று வாதிடும் அவனிடம் சொல்ல இயலவில்லை, பெற்றோரே இல்லாத பிள்ளைகள் பற்றிய நிஜங்களை....

1 comment:

  1. செருப்பே இல்லாதவன் கால் இல்லாதவனைப் பார்த்து மனம் தேறியது நம்ம பால்ய காலம்.வைர கிரீடமே சூட்டினாலும் திருப்தியடையா வாழ்வையே சுமந்து கழிக்க வேண்டியிருக்கிற காலமல்லவா இக்காலம்...

    நிஜங்களை அவனும் உணர இருக்கிறது வருங்காலம்.

    ReplyDelete