Thursday, March 17, 2011

கறைகள்.....

இற்று விட்டதோ
என எண்ணும்படிக்கு
துவண்டு விழும் கால்களோடு

ஒரு நாளைக்கு பல முறையாய்
கழிப்பறைக்குள்  நுழைந்து
ஈரப் பிசுபிசுப்போடிருக்கும் அதை
காகிதத்தில் சுற்றிப் போட்டு
புதிதாக ஒன்றை
சுலபமாக வைத்துக் கொள்ளும்
எல்லா நேரங்களிலும்
தவறாமல் நினைக்கிறேன்

துவைத்து அலசி
யார் கண்ணிலும் படாமல்
ரகசியமாய் காயவைத்து
அழுத்தமாய் படிந்து போன
கறைகளோடு 
அதையே மீண்டும்
கஷ்டப்பட்டு உபயோகிக்கும்
எத்தனையோ பெண்களை...


நன்றி:சௌந்தர சுகன்

2 comments:

  1. நடுங்குகிறது உள்ளம்
    இப்படிப்பட்ட நேரங்களில் என் மனைவி படும் வேதனைகளை நினைத்து.

    ReplyDelete
  2. வலி நிறைந்த கவிதை.. படிக்கும் எவருக்கும் அதே துயர் உணர்த்தி.

    ReplyDelete