Thursday, March 17, 2011

ஞாபகத் தேனீ

குளிர்கால இரவுகளில்
போர்வைக்குள் பதுங்கும் போது
உன் இதமான அன்பு
நினைவுக்கு வருகிறது...!

சூடான தேநீரும்
சில்லிடும் மழையுமாய்
மாலை நேரங்கள்
உன் மந்தகாசப் புன்னகையை
நினைவூட்டுகிறது...!

வேனல் காலத்து
வியர்வை கசகசப்பில்
நீ
விசிறியாய் மாறுகிறாய்..
மாரிக் காலத்தின்
மழைநேரப் பயணத்திலோ
விரிந்த குடையாய்
சாரலுடன் வருகிறாய்....


விழிகள் மூடாத
நீளமான ராத்திரிகளில்
காதோரம் குறுகுறுக்கும்
என்றோ நீ சொன்ன
எனக்கான கவிதை.....


எப்போது உன்னைச் சுற்றியே  
ரீங்காரமிடுகின்ற
என்
ஞாபகத் தேனீ
நெஞ்சுக்கூட்டில்
சிதறாமல் சேர்க்கிறது
உன்
நினைவென்னும் தேனை.....


2 comments:

  1. ஞாபக தேனீக்களின் ரீங்காரம் ரம்யமானது தான் .

    ReplyDelete
  2. கவிதைத் தேன்.. ரசித்தேன்.

    ReplyDelete