Friday, December 17, 2010

பிரிவு ...1

எனைப் பிரிந்து
வெகு  தூரத்திலிருக்கும்
என் பிரியத்துக்குரியவனே...
உனைப் பிரிந்திருக்கும்
நேரத்திலும்
நான் மகிழ்ந்திருக்கிறேன்...


ஓராயிரம் வேலைகளில் நீ 
ஓயாமல் சுழன்றதினால் 
எனக்கான நேரம்

உன் கைகளில் இருந்து 
நழுவிப் போயிருக்கலாம்....


என்னைப் பற்றி
சிந்திக்கவே முடியாதபடி
உன் சூழல் சிலந்தி
உன்னை  வளைத்துப் போட்டிருக்கலாம்..


என்றாலும்
வான வில்லின் 
வண்ணக் குழம்புகளாய்
என் வாழ்க்கை
நிறங்களால் ஜொலிக்கிறது..


எப்படி  தெரியுமா..


உன்னுடன் சேர்ந்திருந்த நேரங்களில் 
சேமித்து வைத்த 
சந்தோஷத் துளிகளை
உன்னைப் 
பிரிந்திருக்கும் நேரங்களில் 
செலவழித்து மகிழ்கிறேன்...


சிறுதுளி பெருவெள்ளம் 
என்பது 
சிக்கன சேமிப்புக்கு மட்டுமல்ல....
சிநேக சேமிப்புக்கும் தான்.


சிறுகச் சிறுக
நான் சேமித்த அன்பில் 
இன்று 
நிரம்பி வழிகிறது 
என் இதய உண்டியல்......


(நன்றி: தினமலர்- பெண்கள் மலர்)

1 comment:

  1. சிநேக சேமிப்பு...நல்ல சொற்கோர்ப்பு. இயல்பாய் இப்படி கவிதைக்குள் வருவது சுவை.

    ReplyDelete