Thursday, December 23, 2010

இனியவனே....

விட்டுக் கொடுப்பதிலும்
பிறரைத்
தட்டிக் கொடுப்பதிலும்
இன்பம் இருப்பதனை
விளங்க வைத்தவன் நீ..!
என்னை
விளங்கிக் கொண்டவன்.....

வாழ்வை ரசிப்பதற்கும்
பிறர்
ரசிக்க வாழ்வதற்கும்

வழிகள் சொன்னவன்
என்னை
வலிமையாக்கியவன்....

தோற்கும் நேரத்திலும்
வெற்றி
தொடரும் நேரத்திலும்
இயல்பாய் இருந்தவன்
என்
இயல்பை உணர்த்தியவன்...

இன்பம் வரும் போதும்
அவை
இல்லாமல் போகும் போதும்
தோள்களில் சாயவிடு
என்றும்
தோழனாய் தொடர்ந்து இரு.........

No comments:

Post a Comment