நாளை சர்வதேச மகளிர் தினம்..... மகளிர் தினத்துக்கென்று தனியாய் பதிவு எழுதாவிட்டால் என்ன, இதோ ஒரு சந்தோஷக் கவிதை...... ஒரு நிகழ்ச்சிக்கென்று எழுதிய இந்த கவிதையை மகிழ்ச்சியான தருணங்களில் வாசிக்கத் தகுந்ததென்று நான் நினைக்கிறேன்... அதையே மகளிர் தின கவிதையாய் இங்கு பதிவேற்றுகிறேன்..........
அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சி மலரட்டும்......

எது மகிழ்ச்சி
என பட்டியலிட்டால்
பல புது மகிழ்ச்சிகள்
புலப்படக்கூடும்
இதோ
என் மகிழ்ச்சிகள் சில........
இதிலே பலவும்,
உங்கள் மகிழ்ச்சிகளாகவும்
இருந்து விடக்கூடும்......
கேளுங்களேன்.....
நான்
நடந்து செல்லும் சாலையில்
நாலைந்து மரங்களாகவது
நிழல் தர நின்றால்
மகிழ்ச்சி.....
அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சி மலரட்டும்......
எது மகிழ்ச்சி
என பட்டியலிட்டால்
பல புது மகிழ்ச்சிகள்
புலப்படக்கூடும்
இதோ
என் மகிழ்ச்சிகள் சில........
இதிலே பலவும்,
உங்கள் மகிழ்ச்சிகளாகவும்
இருந்து விடக்கூடும்......
கேளுங்களேன்.....
நான்
நடந்து செல்லும் சாலையில்
நாலைந்து மரங்களாகவது
நிழல் தர நின்றால்
மகிழ்ச்சி.....
பல்லாங்குழியோ, பச்சைக்குதிரையோ
கல்லா மண்ணா, கால் விளையாட்டோ
யாராடக் கண்டாலும்
மகிழ்ச்சி.....









